5 வயது குழந்தையை வன்கொடுமை செய்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தற்கொலை!

 

5 வயது குழந்தையை வன்கொடுமை செய்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தற்கொலை!

நாமக்கல் மாவட்டத்தில் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள சோழசிராமணி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதால் முத்துக்குமார்- கீதா தம்பதியினர் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு 5 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. அவரது அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் கெளதம் என்பவர் கடந்த 16ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜேடர்பாளையம் காவல்துறையினரிடம் முத்துக்குமார்- கீதா தம்பதியினர் புகாரளித்துள்ளனர்.

5 வயது குழந்தையை வன்கொடுமை செய்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தற்கொலை!

ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் குழந்தையின் பெற்றோர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்துள்ளனர். தங்களுக்கு உரிய நீதி வேண்டுமென்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.