மூன்று நாள்..5 மாவட்டங்கள்.. ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண முழு விபரம்

 

மூன்று நாள்..5 மாவட்டங்கள்.. ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண முழு விபரம்

ராகுல்காந்தி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தற்காலிக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் மூன்று நாள் பயணமாக 23,24,25 ஆகிய தேதிகளில் தமிழக பயணம் மேற்கொள்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார்.

மூன்று நாள்..5 மாவட்டங்கள்.. ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண முழு விபரம்

23ம் தேதி காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் ராகுல்காந்தி, 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 11.10க்கு புறப்படும் ராகுல்காந்தி, 11.30 மணிக்கு காளப்பட்டி சந்திப்பில் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் சின்னியம்பாளையம் சந்திப்பு, அவினாசி சாலையில் 1.45 மணியில் இருந்து 2.15 மணி வரைக்கும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். மதியம் 3.30 மணிக்கு மேல் 3.45க்குள் திருப்பூர் அவினாசி புதிய பேருந்து நிலையத்திலும், 4.10 மணி முதல் 4.40 வரையிலும் திருப்பூர் அனுப்பர்பாளையத்திலும், மாலை 5 மணிக்கு திருப்பூர் குமரன் நினைவு இல்லத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
5.45 மணி முதல் 6.45 மணி வரையிலும் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பிரச்சாரம் செய்கிறார். அன்றைய இரவு திருப்பூர் பொதுப்பணித்துறை விடுதியில் தங்குகிறார்.

மூன்று நாள்..5 மாவட்டங்கள்.. ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண முழு விபரம்

24ம் தேதி அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் பொதுப்பணித்துறையில் இருந்து புறப்பட்டு 10.30 மணி முதல் 10.45 மணி வரையிலும் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியிலும், 11.15 முதல் 11.45 வரையிலும் பெருந்துரையிலும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார்.

12.30 மணியில் இருந்து 12.24 மணி வரையிலும் ஈரோடு பிஎஸ் பூங்காவிலும், 1.15 முதல் 3 மணி வரையிலும் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திலும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் ராகுல்.

3.45 முதல் 4.15வரையிலும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலும், 4.45 முதல் 5.45 வரையிலும் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அன்றைய இரவு தாராபுரம் மல்லி விடுதியில் தங்குகிறார்.

மூன்று நாள்..5 மாவட்டங்கள்.. ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண முழு விபரம்

25ம் தேதி காலை10 மணிக்கு தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு சின்ன தாராபுரத்திலும், 11.10 முதல் 11.40 வரையிலும் கரூர் பேருந்து நிலையத்திலும், 12 மணி முதல் 12.45 வரையிலும் மாரி கவுண்டம்பாளையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் ராகுல்.

1.30 மணி 4.30 மணி வரையிலும் கரூர் ஐந்து சாலையில் மண்பானை சமையல் சாப்பாடு. பின்னர், 3 மணியில் இருந்து 3.30 மணி வரையிலும் பள்ளப்பட்டியிலும் , 4.15 முதல் 4.30 வரையிலும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியிலும் பயணம் மேற்கொள்ளும் ராகுல், மாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.