கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டர்
சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு உள்ளிட்ட அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 26,513 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21லட்சத்து 23ஆயிரத்து 029ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 420பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,722ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா 2ஆவது அலையால் இந்தியாவில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மருத்துவர்கள் தொற்றால் இறந்துள்ளனர்.தடுப்பூசி மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டர் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை கோவளத்தில் கோவிட் இல்லாத கோவளம் என்ற பெயரில் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க ஊராட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தன்னார்வ அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.