ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

 

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

பிக்பாஸ் டீம் அரும்பாடு கண்டுபிடித்தது கால் செண்டர் டாஸ்க்தான். அதன்வழியே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள், சண்டைகள், கோபங்கள், புதிய குழுக்கள்… பல விஷயங்கள் நடக்கும் என நினைத்திருக்கலாம். சென்ற கால் செண்டர் டாஸ்க்கில் அப்படியும் சில சம்பவங்கள் நடந்தன. புயலால் போன வாரத்தில் முடிக்க முடியாததால், இந்த வாரமும் தொடர்ந்த கால் செண்டர் டாஸ்கின் தீபத்தை நேற்றைய எப்பிசோட்டில் ஊதி அணைத்தார்கள் ஹவுஸ்மேட்ஸ். அப்படி என்ன செய்தார்கள்? வாங்க கட்டுரையில் பார்ப்போம்..

பிக்பாஸ் 58- நாள்

நம்ம் 2k கிட்ஸ் தம்பி ‘ஒத்தையடி பாதையில…’ பாடலை ஒலிக்க விட, டான்ஸ்வேற ஆடணுமாம்ல எனச் சிலர் ஆடினார்கள். இதையும் ஒரு டாஸ்கா நினைச்சி ஆடலைன்னா, லக்ஸரி பட்ஜெட்டில் கை வெச்சிருவாரு பிக்கி.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

புயல் மழையால் போன வாரம் பாதியில் நிறுத்தப்பட்ட கால் செண்டர் டாஸ்க்கைத் தொடர்ந்தார்கள். முதன் போன் ஆஜித்திடமிருந்து அர்ச்சனாவுக்கு.

”’லவ் பெட்’டிலிருந்து யாரை நாமினேஷன் செய்திருக்கீங்க?” என ஆஜித் சரியான கேள்வியைக் கேட்க, கருத்து முரண்பாடினால்தான் என் நாமினேஷன் இருக்கும். இவங்கக்கூட கருத்து முரண்பாடு இல்லை எனப் பதில் சொல்ல, ‘ரம்யாவைப் போல, வீட்டில் இருக்கும் அனைவரையும் நாமினேஷன் பண்ண காரணம் சொல்லுங்க’னு கேட்டார் ஆஜித். அங்கேதான் அர்ச்சனா தனது விஜே என்பதை நிருப்பித்தார். ஒவ்வொரு பேரையும் டக் டக்னு சொல்லி, அதுக்கு ஒரு காரணத்தையும் சொல்லி அழகாகச் சொல்லி முடித்தார். அனிதாவைப் பற்றி பேசியதைப் பஞ்சாயத்து ஆகலாம் எனத் தோன்றியது.

’எங்கேயும் திணறலையே’னு நினைச்ச ஆஜித், ‘என்னை நாமினேஷன் பண்ண நாலு காரணங்கள் சொல்லுங்க’னு கேட்டதும், ‘அப்படி ஏதும் இல்லையே’என்று போனை கட் பண்ணி, ஆஜித்தை எவிக்‌ஷனலிருந்து காப்பாற்றினார். இது சரியான அழுகுணி ஆட்டம். அனேகமாக, சம்யுக்தாவின் இடத்தை அர்ச்சனாவுக்கு கொடுத்தாலும் கொடுப்பார் ஆஜித்.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

தன்னைக் காப்பாற்றியதால் 5 ஸ்டார்களை அள்ளித்தந்தார். போனவாரமும் தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு ஸ்டார்களை அள்ளித்தந்ததையும் பார்த்தோம். பாதியில் போனை கட் பண்ணியவருக்கும் ஒரு தண்டனை என வைத்திருந்தால் போட்டி சூடு கிளப்பியிருக்கும். வெளியே வந்த அர்ச்சனாவிடம் ‘நல்லா பேசினீங்க’ என அனிதா சொன்னது ஆச்சர்யம்.

அடுத்து, கேபி போன் செய்தது  சோம்சேகருக்கு. கேபியும் சோம்ஸைக் காப்பாற்றும் விதமாக ‘ஏன் பிக்பாஸ் வந்தீங்க… ஏன் இந்த டைட்டிலை ஜெயிக்கணும்னு நினைக்கிறீங்க… பாம்பே என்ன பண்ட்டு இருந்தீங்க’ என்பது போன்ற லைட்டான கேள்விகளைக் கேட்டுட்டு இருந்தார்.

ஒவ்வொரு போட்டியாளர் பற்றிய ஒவ்வொரு பிடித்த விஷயத்தைக் கேட்டார் கேபி. இதெல்லாம் ரொம்ப ஓவர். சோம்ஸூம்  ‘சொல்ல வந்ததை சரியாக சொல்லிடுவாங்க’னு ஆரி, ஷனமையும், ‘காமடியிலிருந்து போட்டிக்கு வந்திட்டாங்க’னு நிஷாவையும், ‘சரியான இடத்தில் தம் கருத்தைச் சொல்றா’னு ஆஜித்தையும் வரிசையாகச் சொல்லிட்டு இருந்தார்.

ரம்யாவைப் பற்றிச் சொல்லும்போது திக்கி திணறி ‘ தூங்கும்போது உளறுவாங்க… ஐஸ்கிரீம் தர மாட்டாங்க’னு நாலைஞ்சு காரணம் சொல்லி ஜொள் ஊத்தினார். கேபி பேசி முடிக்கும்முன் போனை கட் பண்ணி, கேபியை எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றினார்.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

வெளியே வந்தும் சோம்ஸை விடாது, ‘ரம்யா பற்றி ஒரு காரணம்தான் கேட்டேன். ஏன் இத்தனை சொன்ன?’னு ஓட்டிட்டு இருந்தார் கேபி. ‘நல்லா ஜொள் ஊத்துனீங்க’னு ரமேஷ்கூட கலாய்த்தார்.

அடுத்தது, பாலா போன் செய்தது ஆரிக்கு. இதில் ரொம்பவே ஸ்மார்ட்டான மூவ் பண்ணினார் பாலா. அதாவது ஆரி மீதான குற்றச்சாட்டுகளை, குற்றச்சாட்டுகளாக வைக்காமல் ஆதங்கம் என்று சொல்வது. அப்படிச் சொல்வது மூலமாக ஆரி அவற்றிற்கு பதில் சொல்ல விடாமல் தடுப்பது என புதிய உத்தியோடு களம் இறங்கினார். ஆரி பதில் சொல்ல முற்படும்போதெல்லாம், ‘பிறகு டைம் தாரேன்’னு இழுத்து கொண்டே போனார். கடைசியில் இதற்கெல்லாம் பதில் வேணாம் என போனை கட் பண்ணி, தன்னையே நாமினேஷனுக்கு அழைத்துச் சென்றார். போனை கட் செய்தாலும் ஆரிக்கு 5 ஸ்டார் கொடுக்க மறக்க வில்லை.

பாலாவின் உத்தியைக் கண்டுபிடுத்து, அமைதியானது ஆரியின் சாமார்த்தியம். அவர் கோபப்பட்டிருந்தால் பாலாவின் குற்றச்சாட்டுகள் இன்னும் வலுவாகியிருக்கும். அவை எல்லாம் ஆடியன்ஸ் பார்த்தவைதான். அதனால், அது பற்றி அவர்களுக்கு கருத்து இருக்கும். பாலா ஹவுஸ்மேட்ஸிடம் இந்தக் கருத்தை வலுவாகத் திணிக்கவே இந்த உத்தியைக் கையாண்டிருக்கக்கூடும்.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

வெளியே வந்ததும், பாலாவைப் பாராட்டினார் ஆரி. சண்டை வரும் என எதிர்பார்த்த பிக்கிக்கு கொக்கு.

கேபி, சோஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலா இப்படிப் பேசியதே பயாஸ்தான். ஆரியைப் பேச விட்டுக்கணும்னு எனக் கதைத்தார். இன்னொரு பக்கம், ‘நீ நல்லா பேசின மேன்’ என ஜிங்சக் போட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். அது ஷிவானி என்று சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

ரம்யாவிடம் ஒரு ரகசியம் சொல்லிட்டு இருந்தார். ‘பாலா, ஷிவானியை தங்கச்சின்னு சொன்னதும் அவர் லூசு என்று திட்டினாராம். இதை வைத்து ஷிவானியை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். ஷிவானியை மாதிரி நடித்துகாட்ட முயன்ற ரம்யாவின் செய்கைகள் செம.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

பாலாவிடம் தனியாகப் பேசிட்டு இருந்தார் ரமேஷ். ‘ஆரியிடம் பேசும்போது, ரமேஷ் தவறை ஏன் கண்டுக்கல… பெரிய தயாரிப்பாளர் பையன் என்பதால’னு ஏன் சொன்ன, நானே அதெல்லாம் வேணாம்னுதான் இங்கே வந்தேன். இதை உங்கிட்ட தனியா பேசணும்னுதான் காத்திருந்தேன்’னு ரொம்ப டீசண்டா அதைச் சொல்ல, பாலாவும் ‘ஒரு ப்ளோவுல வந்துருச்சு’னு சொல்ல, கட்டி அணைத்துக்கொண்டார்கள்.

தலையில் முட்டை உடைக்கும் டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. அதைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஏதுமில்லை என்றாலும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. சிரித்துக்கொண்டே பார்க்கலாம். ஆனால், ஒன்றுதான் இடிக்கிறது. உணவு பொருளை இப்படி விரயம் செய்வது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. சினிமா சண்டைகள் போது, காய்கறிகள், உணவுப்பொருட்கள் மீது விழுந்து வீணாக்கும்போதும் இதே கேள்விதான் எழும்.

ஷனம் – பாலா இருவரும் ‘நீ ஆரிக்கு போன் செய்தபோது, அவரை பேச விட்டிருக்கணும்’னு சொல்ல, அதை மறுத்திட்டு இருந்தார் பாலா. மெளனியாகி கேட்டுட்டு இருந்தார் ரம்யா.

ஆரியின் பேச்சை முடக்கிய பாலாவின் புது உத்தி – பிக்பாஸ் 58-ம் நாள்

’விஜய் டிவியைப் போட்டாலே நீங்கதான் வாரீங்க… அதுவும் ஒரே ஜோக்கைத் திரும்ப திரும்ப சொல்லிட்டு’ என நிஷாவை ஓட்டிட்டு இருந்தார் ஆஜித். அவரோடு ரியோ, அர்ச்சனா, சோம், கேபி என கூட்டம் சேர, ‘ஒண்ணு கூடிட்டாங்க அய்யா.. ஒண்ணு கூடிட்டாங்க’ என எஸ்கேப்பானார் நிஷா.

நேற்றைய போன் டாஸ்க் சொதப்பியதால் பிக்கியின் பின்கதை சுருக்கத்தில் நாளைக்கு நல்லா இருக்கும் என உத்திரவாதம் கொடுத்தார், மங்களம்.