புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்வு!

 

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்வு!

உலகளவில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்வு!

இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்வு!

புதுச்சேரியில் நேற்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.