‘2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை’ : கையும் களவுமாக சிக்கிய 53 வயது முதியவர்!

 

‘2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை’ : கையும் களவுமாக சிக்கிய 53 வயது முதியவர்!

கோவை அருகே 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை’ : கையும் களவுமாக சிக்கிய 53 வயது முதியவர்!

கோவை அன்னூர் அருகே புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவருக்கு வயது 53. ஹாலோபிளாக் கற்கள் செய்யும் இடத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சம்பத், அதே பகுதியில் வசித்து வரும் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பெற்றோரின் சம்மதத்துடன் அவர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

‘2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை’ : கையும் களவுமாக சிக்கிய 53 வயது முதியவர்!

சிறிது நேரத்தில் குழந்தை அலறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பத் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சம்பத் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை அங்கேயே அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதனிடையே, போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர். குழந்தைக்கு அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.