500 பெண் சிசு கருக்கலைப்பு … காரணமான ஸ்கேன் செண்டருக்கு சீல்..!?

 

500 பெண் சிசு கருக்கலைப்பு … காரணமான ஸ்கேன் செண்டருக்கு சீல்..!?

சென்னையில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் ஓவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது .2018 ம் ஆண்டு 1000 ம் ஆண்களுக்கு 960 பெண்ணாக இருந்தது 2019ம் ஆண்டு 937 ஆக குறைந்துள்ளது . சில ஸ்கேன் சென்டர்களின் சதிவேலையும் இதற்கு உடந்தை .

சென்னையில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் ஓவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது .2018 ம் ஆண்டு 1000 ம் ஆண்களுக்கு 960 பெண்ணாக இருந்தது 2019ம் ஆண்டு 937 ஆக குறைந்துள்ளது . சில ஸ்கேன் சென்டர்களின் சதிவேலையும் இதற்கு உடந்தை .

scan

வேளச்சேரியில் கடநத ஆண்டு மட்டும் 500 கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்து வயிற்றிலிருக்கும் பெண்குழந்தையை கலைக்க செய்த ஒரு ஸ்கேன் சென்டர் உரிமையாளரை அதிகாரிகள் ரெய்டு பண்ணி கைது செய்தனர் .

sex

திங்கள்கிழமை மருத்துவ இயக்குனராக அதிகாரிகள் ஒரு 5 மாத கர்ப்பிணி பெண்ணை வேளச்சேரியில் உள்ள ஒரு ஸ்கேன்  சென்டருக்கு அனுப்பி என்ன குழந்தையென கேக்குமாறு அனுப்பினார் .அணு இருந்த சிவசங்கரன் என்ற ஸ்கேன் சென்டர் உரிமையாளர் அந்த கர்ப்பிணியை ஸ்கேன் பண்ணி ஆண் குழந்தை வயிற்றில் இருப்பதாகவும் அதற்கு  1200  ரூபாய் கட்டணம் கேட்டார்.இதை பதிவு செய்து வந்து சொன்ன அந்த பெண் மூலம் அதிரடியாக உள்ளே நுழைந்த அதிகாரி  விஸ்வநாதன்  சிவசங்கரனை  PCPNDT சட்டப்படி கைது செய்தனர் .

arrest

மேலும் அவர் அனுமதி பெறாமல் உபாயயோகப்படுத்திய ஸ்கேன் மெஷினையும் பறிமுதல் செய்தனர் .மேலும் சிவசங்கரன் எந்த மருத்துவ படிப்பும் படிக்காமல் இப்படி கர்ப்பிணி பெண்களுக்கு முறையற்ற முறையில் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறியது கண்டறியப்பட்டு அவரை கைது செய்து ,ஸ்கேன் சென்டரை சீல் வைத்து விசாரணை செய்கின்றனர்