கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து: ஐசியூவில் இருந்த 5 பேர் மரணம்!

 

கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து: ஐசியூவில் இருந்த 5 பேர் மரணம்!

குஜராத் அருகே கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இருக்கும் சிவானந்த் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐசியூ வார்டில் தீ விபத்து ஏற்பட்டவுடன், மருத்துவமனை ஊழியர்கள் பிற இடங்களில் இருந்த நோயாளிகளை விரைந்து வெளியேற்றியுள்ளனர். மொத்தம் 33 பேர் மருத்துவனையில் இருந்ததாக தெரிகிறது.

கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து: ஐசியூவில் இருந்த 5 பேர் மரணம்!

ஐசியூவில் இருந்தவர்களை மீட்க தாமதம் ஆனதால், தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஐசியூவில் 11 பேர் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை முழுவதும் தீ பரவுவதற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.