இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். வருகின்ற 26ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதேபோல் 27 மற்றும் 28ம் தேதிகளில் நீலகிரி, கோவை ,தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று முதல் 28ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.