5 மில்லியன் பாலோயர்கள்..  பிரபல நடிகை மரணம்.. கொலையா, தற்கொலையா?!

 

5 மில்லியன் பாலோயர்கள்..  பிரபல நடிகை மரணம்.. கொலையா, தற்கொலையா?!

பிரபலமானவர்களின் மரணம் சில சர்ச்சைகளை விட்டு விட்டே செல்கிறது. பணம், புகழ் என்று எப்போதும் லைம் லைட்டில் வலம் வரும் பிரபலங்கள் பெரும்பாலும் தனிமையிலும், அன்பிற்காக ஏங்கித் தவிப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். மன அழுத்தம், தனிமை போன்றவை அவர்களின் தற்கொலைக்கான பொது காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரபலமானவர்களின் மரணம் சில சர்ச்சைகளை விட்டு விட்டே செல்கிறது. பணம், புகழ் என்று எப்போதும் லைம் லைட்டில் வலம் வரும் பிரபலங்கள் பெரும்பாலும் தனிமையிலும், அன்பிற்காக ஏங்கித் தவிப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். மன அழுத்தம், தனிமை போன்றவை அவர்களின் தற்கொலைக்கான பொது காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், கொரியாவின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான சுல்லி தன் வீட்டில் இறந்து கிடந்தது பாப் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதலில் சுல்லியின் மரணத்தை அவரது மேனேஜர் தான் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருந்தாலும் சுல்லியை வேறொரு விஷயத்திற்காக ரசிகர்கள்  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக தொடர்ந்து வந்தார்கள். இவரது நோ பிரா புரட்சி காரணமாக இவருக்கு சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தார்கள். 

sulli

சுல்லியின் இயற்பெயர் ஷோய் ஜின் ரி. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மற்றொரு கொரிய பாப் பாடகியான ஜாங்க்யூனின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ல் இறந்து விட்ட ஜாங்க்யூனின் நினைவுகள் சுல்லியை பெரிதும் வருத்திக் கொண்டிருந்ததாகத் தகவல். சுல்லியின் ‘நோ பிரா’ புரட்சி நாட்களில் அவர் பலமுறை தனது மார்பகங்களை இன்ஸ்டா நேரலையில் காட்டத் தவறவில்லை. 2016 ஆம் ஆண்டில் முதல்முறையாக சுல்லி தனது மேலாடையற்ற திறந்த மார்பகப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றிய போது சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். எதைப் பற்றியும் துளியும் கவலைப்படாமல், கடந்த மாதம் குடித்து விட்டு மேலாடை இல்லாமல் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து பழமைவாத நம்பிக்கை கொண்ட தென் கொரியாவில் மேலும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் வரவழைத்தார். இந்நிலையில் 25 வயது சுல்லியின் இறப்பை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொரிய போலீசார் இந்த மரணம் கொலையா, தற்கொலையா? எனும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.