தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

 

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்திலிருந்து 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை விமானம் மூலம் சென்னை வர உள்ளது. கொரோனா 3ஆம் அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக்கூடும் என்பதால் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசிடம் தமிழக அரசு தேவையான தடுப்பூசியை பெற்று வருகிறது.