அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்கள் தென் தமிழகம் டெல்டா காரைக்கால் தர்மபுரி, சேலம் ஈரோடு, திருப்பூர், வேலூர் , கிருஷ்ணகிரி மற்றும் கடலூரில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.