450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்…என்ன காரணம்?!

 

450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்…என்ன காரணம்?!

கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள், கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. தற்போது டாஸ்மாக்குகளில் விற்பனை களைகட்டுகிறது. நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள், 2 மணி நேரம் கடைகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் வேலை நேரத்தை குறைக்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்…என்ன காரணம்?!

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சென்னையில் 25 பேர் உட்பட தமிழகம் முழுவதிலும் 450 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த 450 பேரும் அதிரடியாக குடோன்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.