புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளை!

 

புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளை!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அருகே உள்ள அடப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளை!

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது ரபி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 45 சவரன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ரபி அளித்த தகவலின் பேரில், திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களையும் சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.