“அடுத்தவன் கூட ஆட்டோவில் அலையறியே”நடுரோட்டில் ஆட்டோ சங்கராக மாறிய கணவன்

 

“அடுத்தவன் கூட ஆட்டோவில் அலையறியே”நடுரோட்டில் ஆட்டோ சங்கராக மாறிய கணவன்

தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் ,அவர் அடுத்தவருடன் ஆட்டோவில் போவதை பார்த்ததும் நடுரோட்டிலேயே மனைவியை தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையிலிருக்கிறார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் சாண்டாக்ரூஸில் வசிக்கும் லக்ஷ்மன் அர்ஜுன் என்பவர் தனது மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவருக்கு அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதனால் அவர் தன்னுடைய மனைவியை உளவு பார்க்க ஆரம்பித்தார் .அதன் மூலம் அவர் வேறு சில ஆண்களுடன் அடிக்கடி ஆட்டோவில் செல்வது பற்றி அவருக்கு தகவல் கிடைத்துள்ளது
அதன் படி ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் எடுத்து விட்டு அவரின் மனைவியை பின் தொடர்ந்து போன போது அவரின் மனைவியை வேறொரு நபருடன் ஆட்டோவில் போவதை பார்த்தபின், அவர் கடுமையான கோபமுற்றார் .இதனால் அவர் தன்னுடைய மனைவியை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து நடுரோட்டிலேயே பேவர் பிளாக் மூலம் தாக்கியுள்ளார். இந்த காட்சியை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துள்ளார்கள் .அதன் பிறகு அவர் மனைவி குற்றுயிராக கிடந்த போது ,அவர் அப்படியே நடுரோட்டில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார் .பிறகு அங்கிருந்த பொது மக்கள் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இதை பற்றி தகவல் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அவரின் கணவரை கைது செய்தார்கள்

“அடுத்தவன் கூட ஆட்டோவில் அலையறியே”நடுரோட்டில் ஆட்டோ சங்கராக மாறிய கணவன்