கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 420 மாடுகள் வரத்து

 

கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 420 மாடுகள் வரத்து

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இந்த வாரம் கறவை மாடுகள் உட்பட 420 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இவற்றில் 70 வளர்ப்பு கன்றுகளும், 90 எருமை மாடுகளும் அடங்கும். கொரோனா தடைக்கு பிறகு கடந்த வாரம் கூடிய சந்தையில் வழக்கத்திற்கு மாறாக 130 மாடுகளே வந்த நிலையில், இந்த வாரம் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இவற்றை கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கியதால், அனைத்து மாடுகளும் விற்பனையாகின
. முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வந்த வியாபாரிகள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டது.

கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 420 மாடுகள் வரத்து