ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

 

ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு ஊர்க்காவல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அந்த அறிவிப்பில், ‘’ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 40 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த 40 பணியிடங்களில் ஆண்களுக்கு 37 பெண்களுக்கு 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நல்ல உடல் தகுதியுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை முதல் வரும் 5 -ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்’’என்று கூறப்பட்டுள்ளது