சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

 

சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

ராமநாதபுரம்

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(43). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதுகுளத்தூர் அடுத்த எம்.சாலை கிராமத்திற்கு சென்றபோது, தனது உறவினர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கமுதி அனைத்து மகளிர் போலீசார் கந்தசாமியை கைதுசெய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுபத்ரா, கந்தசாமிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன், அபராதம் கட்டத்தவறினால் மேலும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்