மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!

 

மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விசேஷ வீட்டில் சீரியல் செட் போட்டதை தொட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!

டி.கல்லுப்பட்டி அடுத்த பி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளி இவருடைய மகன் ராஜேஷ்(4), பக்கத்து வீட்டில் சடங்கு விசேச நிகழ்ச்சிக்காக போடப்பட்ட சீரியல் செட் லைட் வயரை தொட்டார். இதனால் ராஜேஷ் மீது மின்சாரம் பாய்ந்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சிறுவன் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்து அங்கு சென்ற டி.கல்லுப்பட்டி போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.