“தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை” – 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை!

 

“தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை” – 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை!

தாம்பரம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட, 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை” – 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்களம் பழையநல்லூர் பகுதியில் வசித்து வந்த மோசஸ் என்பவர், தமிழன் தொலைக்காட்சியில் பகுதி செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் நடந்த ஏரிகள் ஆக்கிரமிப்பு, கஞ்சா விற்பனை குறித்து செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல், இவரை படுகொலை செய்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோசஸ் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனக்குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

“தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை” – 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை!

இந்த நிலையில் மோசஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எலிஅப்பு, விக்னேஷ், வெங்கடேசன், நவமணி ஆகிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
விக்னேஷ் என்பவற்றின் தாயாரை மோசஸ் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அதற்கு பழிதீர்க்கவே மோசஸை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 இளைஞர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.