கடன் பிரச்சனை- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலை

 

கடன் பிரச்சனை- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலை

ஓசூர் அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்சனை- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மத்திகிரியில் ஆன்லைன் வர்த்தகம் பார்த்து வந்த மோகன்(45) என்பவர் வங்கி உள்ளிட்டவைகளில் கடன் பெற்ற நிலையில் கடன்காரர்களின் தொல்லை தாங்காமல், அவரது அம்மா வசந்தா(61) மனைவி ரம்யா(36) மகள் அன்மயி(10) ஆகிய 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பாக மோகன் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொள்வதாகவும், தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணையில் ஆன்லைனில் தொழில் செய்து வந்த மோகனுக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் உடற்கூறு ஆய்விற்குப் பின்னரே இறப்பு குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். 4 பேரின் உடல்களும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.