தமிழகத்தில் 4 நாட்களுக்கு…சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சென்னை உட்பட10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை , விழுப்புரம் ,கடலூர், அரியலூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ,திருவள்ளூர், அரியலூர் ,பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வருகின்ற 22ம் தேதி சேலம் தர்மபுரி, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, நீலகிரி, பெரம்பலூர் ,பெரம்பலூர் ,டெல்டா மாவட்டங்கள், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அதேபோல் வருகின்ற 23ம் தேதி சேலம் தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் ,மதுரை ,விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 24ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இன்று முதல் 24ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.