குன்றத்தூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி காரை திருடிய 4 பேர் கைது

 

குன்றத்தூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி காரை திருடிய 4 பேர் கைது

சென்னை

குன்றத்தூர் அருகே காரை திருடிச்சென்ற கொள்ளையர்கள் பெட்ரோல் தீர்ந்து போனதால் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குன்றத்தூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி காரை திருடிய 4 பேர் கைது

சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலையில் நேற்றிரவு காருடன் 5 இளைஞர்கள் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை கண்டு அந்த வழியாக சென்ற அம்பத்தூர் துணை ஆணையர் தனிப்படை குழுவினர், இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன் திடீரென தப்பியோடிய நிலையில், மற்றவர்களை குன்றத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குன்றத்தூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி காரை திருடிய 4 பேர் கைது

இந்த விசாரணையில், பிடிபட்ட நபர்கள் குன்றத்தூரை சேர்ந்த தாமோதரன்(23), தினேஷ்(19), அசோக்(23) மற்றும் அருண் பாண்டியன்(21) என்பதும், தப்பியோடிய நபர் சூர்யா என்பதும் தெரியவந்தது. மேலும், 5 பேரும் கோவூரில் மது அருந்திவிட்டு வந்தபோது அருகேயுள்ள லோகேஷ் என்பவருக்கு சொந்தமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் காரை திருடியதும், தப்பிச்செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் சாலையில் நின்றதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சிக்கிய திருடர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.