புனேவில் இருந்து 4.80லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

 

புனேவில் இருந்து 4.80லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டுவருகிறது.

புனேவில் இருந்து 4.80லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்பட்டன. இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 41 பார்சல்களில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.