4 மணி நேரத்திற்கு முன்… ‘காத்திருந்தேன்’ என்று சொன்ன சுஷ்மா காணாமல் மறைந்தார்!

 

4 மணி நேரத்திற்கு முன்… ‘காத்திருந்தேன்’ என்று சொன்ன சுஷ்மா காணாமல் மறைந்தார்!

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 4 மணி நேரத்திற்கு முன்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

4 மணி நேரத்திற்கு முன்… ‘காத்திருந்தேன்’ என்று சொன்ன சுஷ்மா காணாமல் மறைந்தார்!

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 4 மணி நேரத்திற்கு முன்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்,வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ட்விட்டரில் துடிப்பாக செயல்பட்ட சுஷ்மா, பல்வேறு அரசியல் விவகாரங்களுக்கு தனது கருத்தை பதிவிட்டு வந்தார். நேற்றுக்கூட காஷ்மீர் மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷாவுக்கு வாழ்த்துச்சொல்லி தைரியமான முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடைசியாக அவர் பதிவிட்ட நெகிழ்ச்சியான ட்வீட் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. அதில், “ பிரதமர் மோடிக்கு நன்றி… என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காக காத்திருந்தேன்” என்று சொன்னவர் இன்று மறைந்தார்,