4 கொலை குற்றவாளிகள் என்கவுண்டர் : பேருந்தில் இருந்து போலீசாருக்கு கூச்சலிட்டு, கையசைத்து வாழ்த்து தெரிவித்த மாணவிகள்!

 

4 கொலை குற்றவாளிகள் என்கவுண்டர் : பேருந்தில் இருந்து போலீசாருக்கு கூச்சலிட்டு, கையசைத்து வாழ்த்து தெரிவித்த மாணவிகள்!

இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். 

ttn

இதையடுத்து இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலைக்கு அதாவது   சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்ற போலீசார், எப்படி  கொலை  செய்தார்கள் என்பதை  நடித்து காட்ட  கூறியுள்ளனர்.அப்போது அவர்கள் நடித்து காட்டும் போது , திடீரென தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது.

ttn

இதனால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக  போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா ரெட்டிக்கும் அவரது குடும்பத்திற்கும் உடனடி நீதி கிடைத்து விட்டதாக  பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்ட்டர் செய்ததைக் கேள்விப்பட்ட மாணவிகள் அவ்வழியே  பேருந்தில் சென்றபோது போலீசாரை நோக்கி கையசைத்து  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.