4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த முதல்வர்… தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

 

4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த முதல்வர்… தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

3 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சியைத் திறம்பட நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் அவருக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 136 எம்.எல்.ஏக்களுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டு, அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போதில் இருந்தே அதிமுகவில் குழப்பம் ஆரம்பித்து விட்டது. அவரின் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி  எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், டிடிவி தினகரன் பிரிந்து சென்று வேறு கட்சி தொடங்கியதால் அதிமுகவில் பல குழப்பங்கள் நீடித்தது. 

ttn

எடப்பாடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், எம்.எல்.ஏக்களின் பலம் குறைந்து கொண்டே வந்தது. அதிமுக அரசு சிறுபான்மை அரசு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆட்சி இடைத்தேர்தல் நடக்கும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இது எல்லாம் ஒரு புறம் இருக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியைத் திறம்பட நடத்தினார். ஆண்டாண்டு காலமாக மக்கள் வைத்து வந்த கோரிக்கைகள் இவரின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, 37 மாவட்டங்கள், 9 புதிய மருத்துவக் கல்லூரிகள், வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் முதலீடு ஈர்ப்பு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல எனப் பல திட்டங்களை நிறைவேற்றினார்.

ttn

3 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சியைத் திறம்பட நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் அவருக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவரது ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற சாதனைகளைப் பற்றிய  தமிழக அரசின் சாதனை மலர் வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டுள்ளார்.