4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் எண்ட்ரி கொடுக்கும் சுரேஷ் கோபி

 

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் எண்ட்ரி கொடுக்கும் சுரேஷ் கோபி

நடிகர் சுரேஷ் கோபி 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கயுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகர் சுரேஷ் கோபி 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கயுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 நடிகரும் ராஜ்யசபா எம்.பியுமான சுரேஷ் கோபி கடந்த நான்கு ஆண்டுகளாக மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் நடிப்பதை நிறுத்திருந்தார். இவர் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஐ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் சுரேஷ் பாபு 4 ஆண்டுகளுக்குக் கழித்து மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் ’தமிழரசன்’ படத்தில் டாக்டராக நடிக்கவுள்ளார்.

suresh gopi

இது குறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் அவர் கூறியதாவது, படங்களில் நடிக்கும் முடிவை சில நேரங்களில் நாம் கேட்கும் கதை மாற்றிவிடுகிறது. ‘தமிழரசன்’ படக்கதையையும் எனது கேரக்டரையும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் சொன்னபோது, மறுப்பு சொல்ல வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. இதற்குப் பின்னர் வேறு படங்களில் நடிப்பேனா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று அதில் கூறியுள்ளார்.

suresh gopi

மேலும் இதில் யோகி பாபு, பூமிகா மற்றும் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.