4 ஆண்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும் இளம்பெண்…கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று விளக்கம் அளித்த வினோதம்!
இவர்களுக்கு தனி தனி அறைகள் இருந்துள்ளது. இருப்பினும் ஓஜெடா நான்கு பேருடனும் தொடர்பிலிருந்துள்ளார்.
பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் நால்வருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பம் தரித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியை சேர்ந்தவர் டோரி ஓஜெடா. 20 வயதான இந்த இளம்பெண், நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். பள்ளியில் படிக்கும் போது அறிமுகமான மார்க் என்ற 18 வயது என்ற இளைஞருடன் தொடர்பிலிருந்த அவருக்கு இரண்டு மாதத்திற்கு பிறகு டிராவிஸ் என்ற 23 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. .இதை தொடர்ந்து டோரி ஓஜெடாவின் நீண்ட நாள் நண்பர்களான ஏதன் (22) மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய நான்கு பேருடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இருப்பினும் இவர்களுக்கு தனி தனி அறைகள் இருந்துள்ளது. இருப்பினும் ஓஜெடா நான்கு பேருடனும் தொடர்பிலிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஓஜெடா மற்றும் டிராவிசன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதைதொடந்து டோரி ஓஜெடா கர்ப்பம் தரித்துள்ளார். ஓஜெடா கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்த நிலையில், உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என ஓஜெடா கூறியுள்ளார். மேலும் நாங்கள் குழந்தையை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்ட நம்மூர் வாசிகள், கேட்கும் போதே தலை சுத்துதே…என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.