சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை மதுரவாயல் புறவழிச்சாலையில் தொடர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது
சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் வேலை முடித்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை மறித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் நெற்குன்றத்தை சேர்ந்த தேவகுமார்(23), பிரகாஷ்ராஜ்(19), ராமன்(20), என்பதும், இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை வழிமறித்து அவர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போன்களை பறிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

சென்னை: வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது