டீ கொடுத்த வாலிபர் -ஆடையில்லாமல் கிடந்த பெண் -மூன்று ஆண்டுகளாக நடந்த கொடுமை

 

டீ கொடுத்த வாலிபர் -ஆடையில்லாமல் கிடந்த பெண் -மூன்று ஆண்டுகளாக நடந்த கொடுமை


ஒரு பெண்ணுக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர் .

டீ கொடுத்த வாலிபர் -ஆடையில்லாமல் கிடந்த பெண் -மூன்று ஆண்டுகளாக நடந்த கொடுமை


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு 35 வயதான வாலிபர் கல்யாணமாகி தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த வாலிபர் எந்நேரமும் ஆன்லைனில் சாட் செய்யும் பழக்கமுள்ளவர் .அப்படி அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை சந்தித்தார் .இருவரும் பல மாதங்களாக நண்பர்களாக இருந்தனர் .இதற்கிடையே அவர் அந்த பெண்ணிடம், தனது வீட்டில் சில குடும்ப பிரச்சினைகள் இருப்பதாகவும் ,அதை உடனே வந்து தீர்க்குமாறும் கூறினார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரின் வீட்டிற்கு வந்தார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் தனது மனைவி இப்போதுதான் தன்னிடம் சண்டை போட்டு விட்டு போய் விட்டதாக கூறினார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஒரு தேநீர் கொடுத்தார் .அதை குடித்த அந்த பெண் மயங்கி விழுந்தார் .உடனேயே அந்த வாலிபர் அந்த பெண்ணை அந்த மயங்கிய நிலையில் பலாத்காரம் செய்தார் .அதை வீடியோவும் எடுத்தார் .அதன் பிறகு அந்த பெண் கண் விழித்தபோது தான் நிர்வாணமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அந்த பலாத்கார வீடியோவை காண்பித்து ,இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் .இப்படி கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்தார் . அந்த பெண் இப்போது அவர் மீது போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

டீ கொடுத்த வாலிபர் -ஆடையில்லாமல் கிடந்த பெண் -மூன்று ஆண்டுகளாக நடந்த கொடுமை