31 ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து!

 

31 ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து!

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல்நாள் மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை இன்று வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார். 

Train

இந்நிலையில் பிரதமரின் சுய ஊரடங்குக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.