சென்னையில் இருந்து ஒரே நாளில் 30ஆயிரம் பேர் வெளியூர் பயணம்!

 

சென்னையில் இருந்து ஒரே நாளில் 30ஆயிரம் பேர் வெளியூர் பயணம்!

சென்னையில் இருந்து பயணிகள் வெளியூர் செல்லும் விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதமாக தமிழகம் முடங்கி கிடந்தது. போக்குவரத்து, வணிகம், தொழில்துறை என அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஒரே நாளில் 30ஆயிரம் பேர் வெளியூர் பயணம்!

இதனால் மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக பொது போக்குவரத்து மக்கள் பணிகளுக்கு செல்லவும், சொந்த ஊர்களுக்கு செல்லும் வழிவகை செய்துள்ளது.

சென்னையில் இருந்து ஒரே நாளில் 30ஆயிரம் பேர் வெளியூர் பயணம்!

இந்நிலையில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. முதல் நாளில் நெல்லை, குமரி ,தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து மக்கள் செல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.