தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு! மூன்று பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்…

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு! மூன்று பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்…

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,989பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழந்த 30 பேரில் 25 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். உயிரிழந்த 30 பேரில் மூன்று பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 27 வயது நபர்கள் இரண்டு பேர் 29 வயது நபர் ஒருவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 27 வயது பெண் 27 வயது ஆண் சென்னையிலும் 29 வயது ஆண் விழுப்புரத்திலும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு! மூன்று பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்…

இதேபோல் எவ்வித இணைநோய்களும் இல்லாத 7 பேர் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை 34 பேர் இணை நோய்கள் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.