புதிய வசதிகளுடன் 30 படுக்கை கொண்ட கொரானா சிகிச்சை மையம்

 

புதிய வசதிகளுடன்  30 படுக்கை கொண்ட கொரானா சிகிச்சை மையம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் புதிய வசதிகளுடன் 30 படுக்கை கொண்ட கொரானா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்பேரில் ஆலங்காயம் சுற்று வட்டார மக்களின் வசதிக்காக இந்த சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய வசதிகளுடன்  30 படுக்கை கொண்ட கொரானா சிகிச்சை மையம்

இந்த சிகிச்சை மைய தொடக்க நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோஃபர் கபீல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்களுக்கு அடுத்து தற்போது ஆலங்காயத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.