30 ஆண்டுகளாக டீ மட்டும் குடித்து உயிர் வாழும் பெண்: வியப்பை ஏற்படுத்தும் உண்மை சம்பவம் !

 

30 ஆண்டுகளாக டீ மட்டும் குடித்து உயிர் வாழும் பெண்: வியப்பை ஏற்படுத்தும் உண்மை சம்பவம் !

30 ஆண்டுகளாகப்  பெண் ஒருவர் டீ மட்டுமே குடித்து வாழும் வினோத நிகழ்வு ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர்: 30 ஆண்டுகளாகப்  பெண் ஒருவர் டீ மட்டுமே குடித்து வாழும் வினோத நிகழ்வு ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கரில்  கோரியா மாவட்டத்தின் பரதியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. இப்போது 44 வயதாகும் இவர், தனது 11 வயதில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  

billydevi

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது பெற்றோர்கள், ‘ 6ஆவது படிக்கும்போது பீகார் தலைநகர் பாட்னாவில் ஒரு விளையாட்டுப் போட்டிக்காகப் போன பில்லி தேவி, வீடு திரும்பியதில் இருந்து உணவு, தண்ணீர் எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் சாதாரண டீ குடித்து வந்த பில்லி தேவி, படிப்படியாகப் பால், சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து பிளாக் டீக்கு மாறி விட்டார்’ என்றனர்.

பில்லி தேவிக்கு உடல்நலக் கோளாறு ஏதாவது இருக்குமோ என  மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.