கடலில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

 

கடலில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் கடலில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் முருகானந்தம். மீனவரான, இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது 3 வயது மகள் கமலி. இவர் நேற்று, சிறுவர்களுடன் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் நின்ற படகில் ஏறி விளையாடி உள்ளார்.

கடலில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக கமலி கடலில் தவறி விழுந்தார். இதனால் அந்த பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி தேடியபோது சிறுமி மயங்கி நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை மணமேல்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு கமலியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். தொடர்ந்து, சிறுமி கமலியின் உடல் அவரது சொந்த ஊராக்கு கொண்டுசெல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.