3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை…

 

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை…

திருவாரூர்

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்தவர் மரியசூசை (60). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடி கொண்டிந்த 3 வயது பெண் குழந்தையை தூக்கிச்சென்று வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மரியசூசையை பிடித்து நனனிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை…

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மரியசூசையை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மரியசூசைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து, மரியசூசை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.