கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி!

 

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி!

சென்னை

தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லெட்சுமி நகரை சேர்ந்தவர்கள் விஜயகாந்த் – ஜெபசெல்வி தம்பதியினர். இவர்களது 3 வயது மகன் சாய்சரண். எலக்ட்ரீசியன் ஆன விஜயகாந்த் நேற்று பணிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே குழந்தை சாய்சரண் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சிறுவன் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் ஜெபசெல்வி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், வீட்டின் அருகில் இருந்த கழிநீர் தொட்டியில் சிறுவன் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி!

அங்கு குழந்தையை பிரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த பீர்க்கன்கரணை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.