போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் மரணம்; ஆந்திராவில் தொடரும் சம்பவங்கள்!

 

போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் மரணம்; ஆந்திராவில் தொடரும் சம்பவங்கள்!

கடந்த 31 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் சூரிமேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்தனர்.அவர்களுள் 8 பேர் அன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சானிடைசரை கலந்து குடித்ததால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதன் படி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, சானிடைசரை குடித்த மேலும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சானிடைசரை குடித்தவர்களுள் பலரின் உடல்நிலை மோசமாக நிலையில் இருக்கிறது.

போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் மரணம்; ஆந்திராவில் தொடரும் சம்பவங்கள்!

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து 3 பேர் குடித்துள்ளனர். அவர்கள் 3 பேருமே இன்று உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் சானிடைசரை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் தொடருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.