‘லாரி மீது கார் மோதி விபத்து’ : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்!

 

‘லாரி மீது கார் மோதி விபத்து’ : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்!

திருப்பூர் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் வெள்ளளலூர் பகுதியில் வசித்து வந்த மயில்சாமி, இன்று தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால், காரை ஓட்டிச் சென்ற மயில்சாமி லாரியின் மீது மோதியதாக தெரிகிறது.

‘லாரி மீது கார் மோதி விபத்து’ : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்!

இந்த விபத்தில், காரின் முன்பகுதி லாருக்குள் சென்ற நிலையில் காரில் இருந்த மயில்சாமி, அவரது மனைவி இந்து மற்றும் இந்துவின் மனைவி தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த லைவாணி (46), சிறுவர்கள் ரம்யா மற்றும் கௌதம் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஓலப்பாளையம் பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.