3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்
Jul 18, 2021, 19:38 IST1626617336000
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ் பழனிசாமி மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த கருணாகரன் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பதவி வகித்த அதுல் ஆனந்த் தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் சரவணனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.