பஞ்சர் ஆன ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பரிதாப பலி!

 

பஞ்சர் ஆன ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பரிதாப பலி!

கலியனூர் அருகே பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்னி பேருந்து ஒன்று பஞ்சர் ஆகி நின்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த சிமெண்ட் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது மோதியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அக்தர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பஞ்சர் ஆன ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பரிதாப பலி!

விபத்தில் பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.