‘தீயில் கருகிய நிலையில் கிடந்த 3 சடலங்கள்’ : அதிர வைக்கும் பின்னணி!

 

‘தீயில் கருகிய நிலையில் கிடந்த 3 சடலங்கள்’ : அதிர வைக்கும் பின்னணி!

கொருக்குப்பேட்டை அருகே தாய், மகள் மற்றும் மற்றொரு ஆண் சடலம் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடம்மா(45). இவரது மகள் ரஜிதா(26). இவர் மாநகராட்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வெங்கடம்மாவும் ரஜிதாவும் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வருவதற்குள்ளாகவே இரண்டு பேரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

‘தீயில் கருகிய நிலையில் கிடந்த 3 சடலங்கள்’ : அதிர வைக்கும் பின்னணி!

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் இருவரின் சடலத்தின் அருகில் மற்றொரு ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த பூபாலன்(31) என்பது தெரியவந்துள்ளது. பூபாலனும் ரஜிதாவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததும் 3 முறை பூபாலன் ரஜிதாவுக்கு தாலிகட்டியதையும் மீறி வெங்கடம்மா ரஜிதாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்ததும் தெரியவந்துள்ளது.

‘தீயில் கருகிய நிலையில் கிடந்த 3 சடலங்கள்’ : அதிர வைக்கும் பின்னணி!

ஆத்திரமடைந்த பூபாலன் ரஜிதா வீட்டிற்கு வந்து தீக்குளிக்க முயன்றிருக்கலாம், அதை தடுக்க முற்பட்ட போது வெங்கடம்மா மற்றும் ரஜிதாவும் தீயில் கருகி உயிரிழந்த இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் தான் முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பூபாலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.