தந்தை,மகன் சித்திரவதை மரணம் : 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்!

 

தந்தை,மகன் சித்திரவதை மரணம் : 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மேலும் 5 சாத்தான்குள காவலர்களை கைது செய்தனர்.

தந்தை,மகன் சித்திரவதை மரணம் : 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்!

இதனையடுத்து அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையை கையிலெடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக கைதான 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதனை நேற்று விசாரித்த நீதிபதிகள் காவலர்கள் 5 பேரையும் ஆஜர் படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் படி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில், அவர்கள் 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது வரும் 16 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.