“பலகாரகடை ஊழியரால் பலாத்காரம் ” – பிளாட்பாரத்து சிறுமி ‘பிளட்’டோடு கிடந்த பரிதாபம்

 

“பலகாரகடை ஊழியரால் பலாத்காரம் ” – பிளாட்பாரத்து  சிறுமி ‘பிளட்’டோடு கிடந்த பரிதாபம்

வீடில்லாத காரணத்தால் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த , தொழிலாளர்களின் மூன்று வயது சிறுமியை நள்ளிரவில் ஒரு பலகாரக்கடை ஊழியர் பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் சாலையோரம் தூங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.

“பலகாரகடை ஊழியரால் பலாத்காரம் ” – பிளாட்பாரத்து  சிறுமி ‘பிளட்’டோடு கிடந்த பரிதாபம்

மும்பையில் திங்கள்கிழமை இரவு அங்குள்ள பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களின் மூன்று வயது மகளோடு அங்குள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார்கள் .அப்போது அங்கு ஒரு சாலையோர பலகார கடையில் வேலை செய்யும் 20 வயது வாலிபர் அந்த தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி கொண்டு சென்று, ஒரு தனிமையான இடத்தில் பலாத்காரம் செய்து விட்டு, தூக்கி வந்து அவரின் தாயின் அருகிலேயே போட்டு விட்டு சென்று விட்டார் .
காலையில் எழுந்து பார்த்த அந்த சிறுமியின் தாயார் தனக்கு அருகில் படுத்து தூங்கிகொண்டிருந்த தன்னுடைய மூணு வயது மகள் ரத்தகாயத்தோடிருப்பதை கண்டு அங்குள்ள போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்ற போலீசார் விசாரித்து ,அங்குள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை ஆராய்ந்த போது அங்குள்ள பலகார கடையில் வேலை பார்க்கும் வாலிபர் அதிகாலையில்,அந்த சிறுமியை கடத்தி கொண்டு போவதை கண்டனர் .பிறகு அந்தபலகார கடை வாலிபரை பிடித்து கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தபோது ,அவன் அந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டான் .பிறகு போலீசார் அந்த வாலிபர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

“பலகாரகடை ஊழியரால் பலாத்காரம் ” – பிளாட்பாரத்து  சிறுமி ‘பிளட்’டோடு கிடந்த பரிதாபம்