3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

 

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா, நிரந்தரமாக அவருன் வாழ முடிவெடுத்திருக்கிறார். அன்பரசுவும் திருமணமானவர். ஆனாலும் அவரை தனக்கு தாலியும் கட்டச்சொல்லி அவருடனேயே சென்று சேலத்தில் தனி வீடு வாடகைக்கு எடுத்து குடுத்தனம் நடத்தி வந்துள்ளார்.

மூன்று மாதத்தில் அன்பரசுவும் கசந்துவிட்டதால், தமிழ்ச்செல்வன் என்பவருடன் உறவு வைத்து வந்துள்ளார். அவருடன் அவ்வப்போது சென்று வாழ்ந்துவிட்டு வந்த பத்மா, அவருடனேயே வாழ ஆசைப்பட்டு, அன்பரசுவை பிரிந்து சென்று, தமிழ்ச்செல்வனுடன் தனி வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

பத்மாவின் முதல் கணவர் அமைதியாக இருந்தது போல் அன்பரசுவால் இருக்க முடியவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டு போன பத்மாவை பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பைக்கில் ஜாலியாக பேசிகொண்டு செல்வதை பார்த்த அன்பரசுவுக்கு ஆத்திரம் தலைக்கேறி இருக்கிறது.

கத்தியை எடுத்துக்கொண்டு பைக்கை பின் தொடர்ந்திருக்கிறார். கத்தேரி பகுதியில் அவர்கள் பைக்கை வழிமறித்து கத்திய எடுக்கவும், பைக்கை போட்டுவிட்டு தமிழ்ச்செல்வன் தப்பியிருக்கிறார்.

வசமாக சிக்கிக்கொண்ட பத்மாவை, சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு, தேவூர் போலீசுக்கு போன் போட்டு விபரத்தை சொல்லி இருக்கிறார் அன்பரசு.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பத்மாவை மீட்டு ஈரோடு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.