3 மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவக்கம்!

 

3 மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவக்கம்!

சென்னை, கோவை, ஈரோடு என மூன்று மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் இந்த இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை, கோவை, ஈரோடு என மூன்று மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் இந்த இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. Etoos India என்ற பயிற்சி நிறுவனத்துடன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றனர்.

Free NEET caoching for Govt students

மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை மூலம் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் 4 மையங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு, NEET & JEE தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறதுதமிழகம் முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட இலவச நீட் பயிற்சி மையங்களில் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.