3 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை ஆய்வு மையம்!

 

3 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை ஆய்வு மையம்!

அதிகாலை வரை பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே  தேங்கி நிற்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரையில் நேற்றிரவு முதலே கனமழை  தொடங்கியது. அதிகாலை வரை பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே  தேங்கி நிற்கிறது.

rain

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, கர்நாடக கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

rain

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.