3 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம்!
Sep 5, 2019, 21:01 IST1567697512000
3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், சென்ற மாதத்தில் வேலை வாய்ப்பின்மை 8 புள்ளி 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்ற மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 9 புள்ளி 6 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 7 புள்ளி 8 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக CMIE ஆய்வுகள் தெரிவிக்கின்றன.